ADDED : ஜூலை 02, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே குமாரக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 52; கொத்தனார்.
இவர், கடந்த 28ம் தேதி, வளவனுாரில் சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்தார்.
பின், அங்கிருந்த சிலர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர், இறந்தார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.