ADDED : மார் 27, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் பணிக்கு சென்ற போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கொத்தனார் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த கொளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 61; கொத்தனார். இவர், நேற்று காலை 9:30 மணிக்கு பணிக்கு செல்வதற்காக, கண்டமானடி ரயில்வே தண்டவாளத்தை கடந்தார். அப்போது, காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வராஜ் மீது மோதி இறந்தார்.
தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், போலீசார் திவாகர், மணிவண்ணன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

