/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
ADDED : ஜூன் 08, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார், :கிளியனுார் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிளியனுார் அடுத்த எறையானுார் ஜெய்அனுமான் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 57; இவர், தனது குடும்பத்துடன் கடந்த 1ம் தேதி சென்னைக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.