/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொபட் மீது பஸ் மோதி தச்சு தொழிலாளி பலி
/
மொபட் மீது பஸ் மோதி தச்சு தொழிலாளி பலி
ADDED : மே 14, 2024 05:51 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மொபட் மீது பஸ் மோதி வாலிபர் இறந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் மகன் விக்னேஷ், 23; தச்சுத் தொழிலாளி. சக்திவேல் மகன் சரண்ராஜ், 24; சிவக்குமார் மகன் விமல், 23; நண்பர்கள்.
மூவரும் நேற்று முன்தினம் இரவு 10:40 மணியளவில் ஆக்டிவா மொபட்டில் மடப்பட்டில் இருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு வந்தனர். மொபட்டை சரண்ராஜ் ஓட்டினார்.
மாமந்துார் அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத பஸ் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், மூவரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த மூவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு செல்லும் வழியில் விக்னேஷ் இறந்தார். சரண்ராஜ், விமல் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

