/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரி மண் கடத்தல் 2 பேர் மீது வழக்கு
/
ஏரி மண் கடத்தல் 2 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 01, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஏரி மண் கடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, டிராக்டர், ஜே.சி.பி., யை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை பானாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்குள்ள ஏரியிலிருந்து டிராக்டரில் கிராவல் மண் கடத்தி வந்த வி.மருதுாரைச் சேர்ந்த பக்தவச்சலம் மகன் கார்த்திக், 28; ஜே.சி.பி., டிரைவர் ஆறுமுகம் மகன் சாமிவேல், 49; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து டிராக்டர், ஜே..சி.பி., வாகனங்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.