/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொத்து பிரிப்பதில் தகராறு 8 பேர் மீது வழக்கு
/
சொத்து பிரிப்பதில் தகராறு 8 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 26, 2024 11:01 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சொத்து பிரிப்பதில் உறவினர்களிடையே எழுந்த தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த அத்தியூர்திருவாதி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல்,85; இவருக்கு சொந்தமாக, அதே பகுதியில் 10 சென்ட் வீட்டு மனை உள்ளது. இதனை பாகம் பிரிப்பதில், அண்மையில் தந்தை மகன்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், கதிர்வேல், அவரது மகன்கள் சண்முகசுந்தரம், சிவக்குமார், மகள் சரஸ்வதி, மீனாட்சி, ரஞ்சித், சண்முகசுந்தரம், ரமணி உள்ளிட்டோர் தாக்கிக்கொண்டுள்ளனர். இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் கதிர்வேல் உள்ளிட்ட 8 பேர் மீதும், வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.