/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு
/
அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு
ADDED : மார் 25, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த பனையபுரம் பாப்பனம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வச்சந்திரன், 37; இவர், மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின், மாவட்ட செயலாளராக உள்ளார்.
விழுப்புரத்தில் கட்சி மாநாடு நடத்த, போலீஸ் அனுமதி கிடைக்காத நிலையில், கடந்த 23ம் தேதி, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில், அனுமதியின்றி பேனர் வைத்துள்ளார்.
இது குறித்து, அப்பகுதி வி.ஏ.ஓ., அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், தெய்வசந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

