/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய திறன் தேர்வில் தேர்ச்சி பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
/
தேசிய திறன் தேர்வில் தேர்ச்சி பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
தேசிய திறன் தேர்வில் தேர்ச்சி பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
தேசிய திறன் தேர்வில் தேர்ச்சி பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : மே 03, 2024 10:10 PM

விழுப்புரம், - விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய திறன் படிப்பு உதவி திட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அரசு தேர்வு இயக்ககம் மூலம் நடத்தப்பட்ட தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டம் தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி பெற்ற, விழுப்புரம் மாவட்டத்தில் 4 மாணவர்களுக்கு, சான்றிதழை கலெக்டர் பழனி நேற்று வழங்கினார்.
இந்த தேர்வில் 16 மாணவர்கள் வெற்றி பெற்றனர். அதில், பொம்பூர் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் பூம்பொழிலன், நித்திஷ்ராஜ், கவிநிதி, கழிக்குப்பம் ஆதிதிராவிடர் நல பள்ளி 8ம் வகுப்பு மாணவன் ராகுல் ஆகிய 4 மாணவர்கள் தேர்வாகினர்.
இந்த 4 மாணவர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகம் மூலம் தலா 5,000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டகம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில் தேர்வான மாணவர்களுக்கு, மாதம்தோறும் 1,000 ரூபாய் சிறப்பு உதவித் தொகை, தொடர்ந்து 12ம் வகுப்பு வரை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமை ஆசிரியர்கள் ராஜேந்திரன், சுப்ரமணியன் மற்றும் பெற்றோர் உடனிருந்தனர்.