sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சான்றிதழ்கள், மின் இணைப்பு வங்கி கடன்களுக்கு முன்னுரிமை; கலெக்டர் பழனி அறிவுறுத்தல்

/

சான்றிதழ்கள், மின் இணைப்பு வங்கி கடன்களுக்கு முன்னுரிமை; கலெக்டர் பழனி அறிவுறுத்தல்

சான்றிதழ்கள், மின் இணைப்பு வங்கி கடன்களுக்கு முன்னுரிமை; கலெக்டர் பழனி அறிவுறுத்தல்

சான்றிதழ்கள், மின் இணைப்பு வங்கி கடன்களுக்கு முன்னுரிமை; கலெக்டர் பழனி அறிவுறுத்தல்


ADDED : ஜூலை 22, 2024 11:57 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், சான்றிதழ்கள், மின் இணைப்பு, வங்கி கடன் தொடர்பாக, பொது மக்கள் வழங்கும் மனுக்கள் மீது, உடனடி தீர்வு காண வேண்டும் என கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்து, நியமன அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது கலெக்டர் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக பகுதிகளுக்கான, முதல்வர் திட்ட முகாம் கடந்த 16ம் தேதி தொடங்கி, வரும் செப்டம்பர் 13ம் தேதி வரை 91 முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம் சிறப்பாக நடைபெற ஒன்றியத்திற்கு ஒரு நியமன அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நியமன அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், தங்கள் பகுதிகளில் நடக்கும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்து, முன்னதாகவே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

முகாமின்போது, உடனடி தீர்வாக ஜாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள், ரேஷன் கார்டு போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும். புதிய மின் இணைப்பு தொடர்பாக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மனுக்களை வழங்கினால், உடனடி தீர்வு காண வேண்டும். தொழிற்கடன், கல்விக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு கடன் போன்ற அனைத்துத்துறைகள் மூலம் வழங்கப்படும் வங்கி சார்ந்த கடனுதவி தொடர்பாக வழங்கும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், சப் கலெக்டர் முகுந்தன், ஊராட்சி உதவி இயக்குனர் விக்னேஷ், ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல்ஹமீது மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us