sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பசுமலை சுப்ரமணியர் கோவிலில் தேரோட்டம்

/

பசுமலை சுப்ரமணியர் கோவிலில் தேரோட்டம்

பசுமலை சுப்ரமணியர் கோவிலில் தேரோட்டம்

பசுமலை சுப்ரமணியர் கோவிலில் தேரோட்டம்


ADDED : மார் 25, 2024 05:16 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அடுத்த மேல்ஒலக்கூர் பசுமலை சுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது.

அதனையொட்டி, கடந்த 15ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து தினமும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்து வந்தது.

19ம் தேதி மயில் வாகனத்திலும், 20ம் தேதி முத்து பிரபை வாகனத்திலும், 21ம் தேதி இந்திர விமானத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. 22ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று முன்தினம் மாலை நடந்தது. திருத்தேரில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நேற்று தீர்த்தவாரி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us