/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : செப் 06, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அடுத்த பெரியதச்சூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முகாமிற்கு, அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமதாஸ் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன், விவசாய அணி பாஸ்கர், டாக்டர் சரண்யா, மயிலம் வருவாய் ஆய்வாளர் கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.
திரளான பொதுமக்கள் முகாமில் பங்கேற்ற அரசுத் துறை அலுவலர்களிடம் மனுக்களைக் கொடுத்தனர்.