/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 11, 2024 05:27 AM
வானுார் : வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட 6 ஊராட்சிகளுக்கு, பொம்பூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
பொம்பூர், சிறுவை, இளையாண்டிப்பட்டு, கோரைக்கேணி, பொன்னம்பூண்டி, ஐவேலி ஆகிய 6 ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. பொம்பூரில் நடந்த முகாமை ஒன்றிய சேர்மன் உஷா முரளி துவக்கி வைத்தார். துணைச் சேர்மன் பருவ கீர்த்தனா விநாயகமூர்த்தி, வானுார் பி.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், தேவதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சரவணன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் முரளி, மைதிலி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் அன்புமணி, கவுன்சிலர் முருகன், பொம்பூர் ஊராட்சி தலைவர் அமுதா, சிறுவை ஊராட்சி தலைவர் குமுதா, துணைத்தலைவர் ஜெயமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மின்வாரியம் உட்பட 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர்.