ADDED : செப் 16, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில், இரு ரவுடிகளிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற பங்க் ராஜா, 37; அதே பகுதியைச் சேர்ந்தவர் மந்திமணி என்கிற மணிவண்ணன்,30: பிரபல ரவுடிகளான இருவரும் நண்பர்களாக உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இருவரும் மது அருந்தியபோது வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் ராஜா, கீழ்பெரும்பாக்கம் பெருமாள் கோவில் அருகே நேற்று முன்தினம் நின்றிருந்தார்.
அங்கு வந்த மந்திமணி, ராஜாவிடம் தகராறு செய்து, தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, மந்திமணியை கைது செய்தனர்.