/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அவலுார்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
அவலுார்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஜூலை 27, 2024 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.
மேல்மலையனுார் ஒன்றியம் அவலுார்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இதில் பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத்முகமத், துறை சார்ந்த அதிகாரிகள், ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகின்அர்ஷத், ஊராட்சி தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.