/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : மே 30, 2024 05:06 AM

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரான பழனி பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமான, விழுப்புரம் அரசு அண்ணா கலைக்கல்லுாரி மையத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, வானுார், திண்டிவனம் ஆகிய 6 தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், விவிபாட் சாதனங்கள், தபால் ஓட்டுகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு அடுக்கு சி.சி.டி.வி.,க்கள் மூலம் 24 மணி நேரமும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஓட்டு எண்ணும் மையத்தின் கண்காணிப்பு பணியை, மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் பழனி நேற்று பிற்பகல் நேரில் ஆய்வு செய்தார்.
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பிறகு, கலெக்டர் உள்ளே சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து, 6 ஸ்ட்ராங் ரூம்களின் போலீஸ் பாதுகாப்பையும் பார்வையிட்டார்.
அங்கு சுழற்சி முறையில் உள்ள துணை ராணுவ படையினரின் கண்காணிப்பு குறித்தும் மற்றும் கண்காணிப்பு அறையிலிருந்து சி.சி.டி.வி., காட்சிகளையும் பார்வையிட்டு, அங்குள்ள அலுவலரிடம் பாதுகாப்பு நிலவரங்களை கேட்டறிந்தார்.