ADDED : செப் 04, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு மகள் சந்தானலட்சுமி,18; இவர், வளவனூர் பகுதி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.டெக்., படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காதால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.