/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ வழக்கு
/
கல்லுாரி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ வழக்கு
கல்லுாரி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ வழக்கு
கல்லுாரி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ வழக்கு
ADDED : ஆக 22, 2024 12:25 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பாமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்துள்ளனர்.
திருவெண்ணைநல்லுார் தாலுகா கெங்கராயநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் சந்துரு,21; இவர், அரசு கல்லுாரியில் பி.ஏ., படித்து முடித்துள்ளார். இவர் கல்லுாரி ஒன்றில் தற்போது படித்து வரும் 17 வயது சிறுமியுடன், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டு, 6 மாதமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருக்கமாக இருந்ததால், தற்போது அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். அவரை திருமணம் செய்துகொள்ளவும், சந்துரு மறுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சந்துரு மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.