/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
/
மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
ADDED : ஜூன் 26, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ஏனாதிமங்கலம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள தென் பெண்ணை ஆற்றில் மணல் கடத்தியவர்கள் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதையெடுத்து போலீசார் மணல் கடத்தி வைத்திருந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.