/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில் தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் சடலம்
/
ரயில் தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் சடலம்
ADDED : ஆக 25, 2024 06:10 AM
விழுப்புரம்: வளவனுாரில் ரயில் தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் கிடந்த ஆண் உடல் குறித்து போலீசார் விாரித்து வருகின்றனர்.
வளவனுார், பக்கமேடு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே முட்புதரில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல், நேற்று முன்தினம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
குறித்து தகவல் அறிந்த ரயில்வே இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், சப் இன்ஸ்பெக்டர் ஜூலி மார்க்ரெட்மேரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயில் படியில் பயணித்த போது, தவறி முட்புதரில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.