/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' மீதான அவதுாறு வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு
/
'மாஜி' மீதான அவதுாறு வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு
ADDED : மார் 22, 2024 05:56 AM
விழுப்புரம் : முன்னாள் அமைச்சர் சண்முகம் மீதான அவதுாறு வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மற்றும் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் கடந்தாண்டு நடந்த மூன்று அ.தி.மு.க., பொதுக்கூட்டங்களில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகம், தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும், அவதுாறாக பேசியதாக விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த மூன்று வழக்குகளையும் விசாரிக்க சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளாக கூறினர்.
அதனையேற்ற மாஜிஸ்திரேட் ராதிகா, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

