/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணிடம் தகராறு; 2 பேர் மீது வழக்கு
/
பெண்ணிடம் தகராறு; 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 01, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில், குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம், வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி மனைவி அமுதா, 41; இவர், கடந்த 26ம் தேதி தனது வீட்டருகே நின்றிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் அய்யனார், 36; சரவணன் மகன் விஷ்ணு, 25; ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் அய்யனார், விஷ்ணு ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.