/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.கொசப்பாளையம் கோவில் அம்மன் தேர் வெள்ளோட்டம்
/
தி.கொசப்பாளையம் கோவில் அம்மன் தேர் வெள்ளோட்டம்
ADDED : செப் 17, 2024 04:46 AM

விழுப்புரம், : தி.கொசப்பாளையம் கிராமத்தில், கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது.
காணை ஒன்றியம், தி.கொசப்பாளையம் கிராமத்தில் உள்ள கலச காமாட்சியம்மன் கோவிலில் புதிதாக தேர் செய்யப்பட்டுள்ளது.
இதன் வெள்ளோட்டம் நடந்தது. அதனையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புன்னியாகவஜனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடந்தது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ சாந்து ருத்ர ஹோமம், மகா பூர்ணாஹூதி, மஹா தீபாரதனை நடந்தது.
பகல் 12:00 மணிக்கு ஸ்ரீ கலச காமாட்சி அம்மன் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில், ஊர் முக்கியஸ்தர்கள், குலதெய்வ வழிபாடு பக்தர்கள், இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.