/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புளிய மரத்திலிருந்து விழுந்த டிரைவர் பலி
/
புளிய மரத்திலிருந்து விழுந்த டிரைவர் பலி
ADDED : ஏப் 02, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அடுத்த சின்னமடம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 52; லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் சின்னமடம் அரசு நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள புளிய மரத்தில் ஏறி, புளி உலுக்கினார்.
அப்போது தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

