/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிணற்றில் துார் வாரிய தொழிலாளி பலி
/
கிணற்றில் துார் வாரிய தொழிலாளி பலி
ADDED : ஜூலை 30, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே துார் வாரும் பணியின் போது, மண் விழுந்து தொழிலாளி இறந்தார்.
மேல்மலையனுார் அடுத்த புதுார் பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 55; இவர், நேற்று முன்தினம் மானந்தல் கிராமத்தில் ஆனந்தன் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில் துார் வாரும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது கிரேனிலிருந்து மண் சரிந்து விழுந்தது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

