ADDED : மே 30, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அருகே அரசு பஸ் மோதியதில் நடந்து சென்ற மூதாட்டி இறந்தார்.
செஞ்சி, திண்டிவனம் சாலை சக்கராபுரம் புதிய காலனியை சேர்ந்தவர் அபிமன்னம் மனைவி முனியம்மாள் 65; இவர் நேற்று காலை 5 மணியளவில் செஞ்சி-திண்டிவனம் மெயின்ரோடு களையூர் கூட்ரோடு அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த முனியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்த செஞ்சி போலீசார் முனியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.