sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலை நடுவே மின்கம்பம்; வாகன ஓட்டிகள் அச்சம்

/

சாலை நடுவே மின்கம்பம்; வாகன ஓட்டிகள் அச்சம்

சாலை நடுவே மின்கம்பம்; வாகன ஓட்டிகள் அச்சம்

சாலை நடுவே மின்கம்பம்; வாகன ஓட்டிகள் அச்சம்

1


ADDED : ஜூன் 16, 2024 11:55 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 11:55 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் சிங்கப்பூர் நகருக்குச் செல்லும் சாலை நடுவே உள்ள மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலையில், சிங்கப்பூர் நகருக்கு செல்லும் தார் சாலை உள்ளது. இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இது மட்டுமின்றி, அங்கு தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் அலுவலகமும் உள்ளதால் இவ்வழியை பொதுமக்கள் பலரும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் செல்கின்றனர்.

இங்குள்ள தார் சாலை நடுவே, மின்கம்பம் பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளது.

இந்த சாலையில், இரவு நேரங்களில் தெரு விளக்குகளும் எரியாமல் உள்ளது.

இதனால், இரவில் வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், அந்த கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

மின் கம்பத்தை அகற்றி சாலை ஓரமாக வைக்கும்படி, அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பெரும் விபத்து ஏற்படும் முன் சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை ஓரமாக மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us