/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இன்ஜினியர் மாயம் போலீஸ் விசாரணை
/
இன்ஜினியர் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : மே 03, 2024 10:02 PM
விழுப்புரம்,- விழுப்புரம் அருகே காணாமல் போன இன்ஜினியர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த சென்னகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் வேலு, 31; தனியார் நிறுவன ஊழியரான இவர், ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.
இவருக்கு பொன்மகள் என்பவருடன் திருமண மாகி, 6 ஆண்டுகள் ஆகி றது. இவர்கள் புதுச்சேரியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வேலு, கடந்த 22ம் தேதி, மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கோபித்துகொண்டு, சென்னகுணம் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பிறகு அங்கிருந்து புதுச்சேரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.