/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடும்ப தகராறு தொழிலாளி தற்கொலை
/
குடும்ப தகராறு தொழிலாளி தற்கொலை
ADDED : ஜூலை 14, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணை அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
காணை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் வினாயகமூர்த்தி, 30; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த வினாயகமூர்த்தி நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.