ADDED : ஜூன் 15, 2024 06:29 AM

விக்கிரவாண்டி, ஜூன் 15-
விக்கிரவாண்டி அருகே குடும்ப பிரச்னை காரணமாக ஏட்டு துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம், மதுரா கொசப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ரமேஷ், 42; இவர், திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால், மனமுடைந்த அவர், நேற்று காலை வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார்.
உடன் குடும்பத்தினர் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இறந்த ரமேஷிற்கு ஜெகதீஸ்வரி, 40; என்ற மனைவியும், ஜெய் ஆகாஷ், 14; என்ற மகனும், அஷ்மிதா, 10; என்ற மகளும் உள்ளனர்.
புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.