ADDED : மே 06, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணை அருகே மகளை காணவில்லை என தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
காணை அருகே கொண்டங்கி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகள் கீர்த்திகா,23; பி.ஏ., பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை ஆனந்தன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.