ADDED : மே 12, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணம் அடுத்த காணிமேட்டில் மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
மரக்காணம் அடுத்த காணிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகள் சாதனா, 17; இவரை கடந்த 9ம் தேதி காலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சக்கரவரத்தி கொடுத்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.