ADDED : ஜூன் 04, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் தந்தையைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன், 46; ஓட்டலில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். குடிப்பழக்ம் உடைய இவர், கடந்த 31ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த அவரது மகன் அஜித் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.