ADDED : ஜூன் 10, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கிளியனுார் அடுத்த கேணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகள் நிஷா, 20; இவர், சென்னை குயின்மேரீஸ் கல்லுாரியில் பி.ஏ., படித்து வருகிறார். கல்லுாரி விடுமுறையில் வீட்டிற்கு வந்தவரை கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாய், பொற்கலை அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.