sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தீ மிதி விழா

/

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தீ மிதி விழா

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தீ மிதி விழா

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தீ மிதி விழா


ADDED : மார் 03, 2025 06:37 AM

Google News

ADDED : மார் 03, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தீமிதி விழாவான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. பிற்பகல் 2:30 மணிக்கு அக்னி குளத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை கோவில் முன்பு அமைத்திருந்த தீக்குண்டம் முன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

அப்போது காப்பு அணிந்து விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தி, ஆகாய மார்கமாக அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். 3:15 மணிக்கு சேலம் மாவட்டம், ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமானந்தம் சுவாமிகள் தீக்குண்டம் இறங்கி தீமிதி விழாவை துவக்கி வைத்தார்.

இதையடுத்து, கோவில் பூசாரிகளும், தமிழகம் முழுவதும் இருந்து காப்பு அணிந்து விரதமிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவு 9:00 மணி வரை தீ மிதித்தனர்.

ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலை உதவி அணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

விழுப்புரம் எஸ்.பி., சரவணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார், மாவட்ட தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர்.






      Dinamalar
      Follow us