நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த தென்பாசியார் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
தீமிதி திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் அலகு குத்தி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.