sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தச்சு தொழிலாளியிடம் ரூ.1 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு

/

தச்சு தொழிலாளியிடம் ரூ.1 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு

தச்சு தொழிலாளியிடம் ரூ.1 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு

தச்சு தொழிலாளியிடம் ரூ.1 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு


ADDED : ஜூலை 30, 2024 11:34 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : கடன் வாங்கித் தருவதாக கூறி, மொபைல் போன் மூலம் தச்சு தொழிலாளியை ஏமாற்றி 1 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 29; தச்சு தொழிலாளி.

இவரது மொபைல் போனுக்கு கடந்த மே மாதம் 15ம் தேதி லோன் வழங்கப்படும் என குறுந்தகவல் வந்தது.

இதைப்பார்த்த சிவக்குமார், அந்த குறுந்தகவலில் இருந்த மொபைல் போன் எண்ணை தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது, பேசிய மர்ம நபர், வங்கி கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். அதனை நம்பிய சிவக்குமார், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை மர்ம நபரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பிறகு அந்த நபர், சிவக்குமாரை தொடர்புகொண்டு, 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தருவதாகவும், அதனை உங்களது வங்கி கணக்கில் செலுத்த, புராசசிங் கட்டணம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்காக பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய சிவக்குமார், அந்த நபரின் வங்கி கணக்கிற்கு, 11 தவணைகளாக 1 லட்சத்து 10 ஆயிரத்து 81 ரூபாயை அனுப்பி வைத்தார். அந்த பணத்தைப்பெற்ற மர்ம நபர், மேலும் பணத்தை கேட்டுள்ளார்.

இதனால், ஏமாற்றமடைந்த சிவக்குமார், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார், நேற்று வழக்குப்பதிந்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us