ADDED : செப் 09, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த கவரை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் பனிமலர் ராஜாராம், ஊராட்சி தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தனர்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், 47 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், செஞ்சி தாசில்தார் ஏழுமலை, பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, முல்லை, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.