/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
/
முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
ADDED : ஜூன் 26, 2024 03:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : நன்னாட்டாம்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.
விழுப்புரம் அடுத்த நன்னாட்டாம்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் ஆனி மாத உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதியம் சாகை வார்த்தல் வழிபாடு நடந்தது.
கூழ்குடங்களுடன் ஊர்வலமாக வந்த பெண்கள், மதியம் 2:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றி படையலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து, முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது.