/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமிக்கு ஆண் குழந்தை கணவர் மீது 'போக்சோ'
/
சிறுமிக்கு ஆண் குழந்தை கணவர் மீது 'போக்சோ'
ADDED : ஆக 08, 2024 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் கன்னியப்பன்,19; இவர் 15 வயது சிறுமியை காதலித்து நெருங்கிப் பழகினார். இதில், சிறுமி கர்ப்பமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து கன்னியப்பன், சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
சிறுமிக்கு கடந்த 7ம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ மற்றும் ் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் கன்னியப்பன் மீது நேற்று வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.