sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டீ கடைக்குள் பாய்ந்த அரசு பஸ்; போதை டிரைவருக்கு தர்ம அடி: திண்டிவனம் அருகே பரபரப்பு

/

டீ கடைக்குள் பாய்ந்த அரசு பஸ்; போதை டிரைவருக்கு தர்ம அடி: திண்டிவனம் அருகே பரபரப்பு

டீ கடைக்குள் பாய்ந்த அரசு பஸ்; போதை டிரைவருக்கு தர்ம அடி: திண்டிவனம் அருகே பரபரப்பு

டீ கடைக்குள் பாய்ந்த அரசு பஸ்; போதை டிரைவருக்கு தர்ம அடி: திண்டிவனம் அருகே பரபரப்பு


ADDED : பிப் 25, 2025 06:51 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனம் அருகே சாலையோர டீ கடைக்குள் அரசு பஸ் புகுந்ததையொட்டி போதை டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரை சேர்ந்தவர் ஜேம்ஸ் அசோக், 41; அரசு பஸ் டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை, புதுக்கோட்டையிலிருந்து சென்னை சென்ற அரசு பஸ்சில் பணியில் இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் திண்டிவனம் - சென்னை சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாரம் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள டீக்கடைக்குள் புகுந்தது. அப்போது, டீக்கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இந்த விபத்தில் டிரைவர் மற்றும் பயணிகள் சிலர் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்து டீ கடை உரிமையாளரான சந்திரன் கொடுத்த புகாரில் ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us