sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்த அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

/

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்த அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்த அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்த அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு


ADDED : ஜூன் 08, 2024 04:42 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் அல்லது பள்ளி, கல்லுாரி அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் செய்திக்குறிப்பு:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில், 1,040 டவுன் பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு அரசு பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு பாலிடெக்னிக், ஐ.டிஐ., மாணவர்கள் என 5 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் வரை இந்த அரசு பஸ்களில் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தமிழகம் முழுதும் வரும் 10ம் தேதி, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, மாணவ, மாணவிகள் சீருடை அல்லது கடந்தாண்டு கொடுக்கப்பட்டுள்ள பஸ் பாசை காண்பித்தோ அல்லது பள்ளி, கல்லுாரிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us