/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நர்சிங் மாணவர்களுக்கு பயிற்சி ஆணை வழங்கல்
/
நர்சிங் மாணவர்களுக்கு பயிற்சி ஆணை வழங்கல்
ADDED : ஜூலை 12, 2024 06:23 AM

செஞ்சி: கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் பயிற்சிக்கு செல்லும் மாணவர்களுக்கு பயிற்சி ஆணை வழங்கும் விழா நடந்தது.
திண்டிவனம் அடுத்த கிளியனுார் ரங்க பூபதி நர்சிங் கல்லுாரி மாணவர்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மருத்துவ பயிற்சி பெற அனுமதி கிடைத்துள்ளது.
மாணவர்களுக்கு இதற்கான ஆணையை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி வரவேற்றார். தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வு பெற்ற மேலாளர் சிவசங்கர் முன்னிலை வகித்தார். கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி மாணவர்களுக்கு பயிற்சி ஆணையை வழங்கினார்.
துணை முதல்வர் மாலதி, பேராசிரியர்கள் வனிதா, மீரா, லாவண்யா, தனலட்சுமி, பிரகதீஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.