ADDED : ஆக 01, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று மதியம் சாலாமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ரயில்வே கேட் அருகே வள்ளலார் நகரைச் சேர்ந்த அர்ஜின்சிங் மகன்அர்மந்த்சிங், 25; பதுக்கி வைத்திருந்த, 3,245 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.