ADDED : ஜூன் 04, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அறிவழகி தலைமையிலான போலீசார், தென்னமாதேவி கிராமத்தில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு, குட்கா பொருட்களை கடையில் வைத்து விற்ற அதே கிராமத்தை சேர்ந்த அசோக்குமார், 41; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.