ADDED : மே 03, 2024 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், - விழுப்புரத்தில் குட்கா கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார், நேற்று கீழ்ப்பெரும்பாக்கம் தரைப்பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த வளவனுாரைச் சேர்ந்த அப்துல்சுபான் மகன் தாகிர் நிஷாவை, 29; என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் 120 குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இது குறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, அவரி டமிருந்து குட்கா பாக்கெட்டுகள், கடத்தலுக்கு பயன்படுத்தி பைக்கையும் பறிமுதல் செய்து, தாகிர் நிஷாவை கைது செய்தனர்.