sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கனரக வாகனங்கள் செஞ்சி நகருக்குள் வர தடை தேவை! செஞ்சியில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

/

கனரக வாகனங்கள் செஞ்சி நகருக்குள் வர தடை தேவை! செஞ்சியில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

கனரக வாகனங்கள் செஞ்சி நகருக்குள் வர தடை தேவை! செஞ்சியில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

கனரக வாகனங்கள் செஞ்சி நகருக்குள் வர தடை தேவை! செஞ்சியில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி


ADDED : ஜூன் 30, 2024 11:33 PM

Google News

ADDED : ஜூன் 30, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி நகரில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரிப்பதால் கனரக லாரிகளை பகல் நேரத்தில் நகருக்குள் வராமல் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களுக்குச் செல்லும் பிரதான வழியாக செஞ்சி நகரம் உள்ளது. புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை எண்.66 தற்போது விரிவாக்கம் செய்ப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வரை நான்கு வழிச் சாலையாகவும், திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரை இரு வழிசாலையாகவும் மாற்றியுள்ளனர்.

இதற்கு முன்பு வரை செங்கல்பட்டு வழியாக பெங்களூரு - சென்னை ஹைவே சென்று அங்கிருந்து பெங்களூரு, மும்பை சென்ற சரக்கு லாரிகளும், ஆம்னி பஸ்களும் இப்போது செஞ்சி வழியாக செல்கின்றன.

பெங்களூருவில் இருந்து வார இறுதியில் புதுச்சேரிக்கு ஏராளமான கார்கள் வருகின்றன.

இந்த வழியில் செஞ்சி நகருக்குள் வராமல் செல்ல புறவழிச்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக சென்று விடுகின்றன. இருப்பினும் சில டாரஸ் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இன்னமும் செஞ்சி நகரம் வழியாக செல்கின்றன.

குறிப்பாக திருவண்ணாமலை மார்க்கத்திலிருந்து புதுச்சேரி செல்லும் கனரக வாகனங்களை பகல் நேரத்திலும் நகரின் வழியாக ஓட்டிச் செல்கின்றனர். ஏற்கனவே இட நெருக்கடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு செஞ்சி நகர மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இதுபோன்று செல்லும் கனரக வாகனங்களால் பல மணிநேரம் டிராபிக் ஜாம் ஏற்பட காரணமாக அமைகின்றன.

எனவே, செஞ்சி நகர வணிகர்களுக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகளைத் தவிர பிற கனரக வாகனங்களையும், அதிக சக்கரங்களைக் கொண்ட டாரஸ் லாரிகளையும் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செஞ்சி நகரருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாகச் செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கான அறிவிப்பு பலகையை புறவழிச்சாலை துவங்கும் இரண்டு இடங்களிலும் பேனராக வைத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். போலீசாரின் அறிவிப்பை மீறி நகருக்குள் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us