sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரியில் மனித கழிவுகள் திறந்து விடும் அவலம்; அதிகாரிகள் கவனிப்பார்களா?

/

ஏரியில் மனித கழிவுகள் திறந்து விடும் அவலம்; அதிகாரிகள் கவனிப்பார்களா?

ஏரியில் மனித கழிவுகள் திறந்து விடும் அவலம்; அதிகாரிகள் கவனிப்பார்களா?

ஏரியில் மனித கழிவுகள் திறந்து விடும் அவலம்; அதிகாரிகள் கவனிப்பார்களா?


ADDED : ஜூலை 22, 2024 01:37 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம் : கண்டமங்கலம் பகுதியில் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் மனித கழிவுகள் நவம்மாள்மருதுார் ஏரியில் திறந்து விடப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டமங்கலத்தில் இருந்து 1 கி.மீ., தொலைவில் நவம்மாள்மருதுார் கிராமம் உள்ளது. கிராமத்தையொட்டி 150 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது.

புதுச்சேரி மற்றும் கண்டமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் அதன் டிரைவர்கள் மனித கழிவுகளை இரவு பகலாக கொண்டு வந்து நவம்மாள்மருதுார் ஏரியில் திறந்து விடுகின்றனர்.

இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

வறண்டு கிடக்கும் ஏரியில் தேங்கியுள்ள மழைநீர் கால்நடைகளின் தாகம் தீர்க்கும் ஆதாரமாக உள்ளது. இதில் மனித கழிவுகள் கலப்பதால் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரம் இல்லாத நிலை ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரியில் மனித கழிவுகள் திறந்து விடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us