ADDED : மே 07, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 34; இவரது மனைவி அனிதா, 30; இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். ஏழுமலைக்கும், அனிதாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி மாலை 4:30 மணியளவில் இருவருக்கும் திடீரென பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஏழுமலை மனைவி அனிதாவைத் தாக்கினார்.
காயமடைந்த அனிதா விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அனிதா அளித்தபுகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து ஏழுமலையை கைது செய்தனர்.