ADDED : ஆக 29, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த பரசுரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி பிரேமலதா, 32; திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பிரேமலதா கோணங்கிபாளையம் கிராமத்தில் உள்ள தொண்டு நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
இவரை கடந்த 25ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பரமசிவம் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.