sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொன்முடி மீதான குவாரி வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாட்சியம்

/

பொன்முடி மீதான குவாரி வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாட்சியம்

பொன்முடி மீதான குவாரி வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாட்சியம்

பொன்முடி மீதான குவாரி வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாட்சியம்


ADDED : ஆக 15, 2024 04:33 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான குவாரி வழக்கில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் சுப்பிரமணியன் நேற்று சாட்சியம் அளித்தார்.

விழுப்புரம் அடுத்த பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில், மொத்தமுள்ள 67 சாட்சிகளில், 50 பேர் விசாரிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

நேற்றைய விசாரணையில், முன்னாள் கலெக்டரும், தற்போதைய தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினரான சுப்பிரமணியன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது அவர், தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., ஆகியோர் விசாரித்து அனுப்பிய கோப்புகளை மட்டுமே ஆய்வு செய்ததாக சாட்சியம் அளித்தார்.

அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us